உலக நாடுகளால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவன் ஹஃபீஸ் சயீது. இவனுடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பு பல்வேறு உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2008-ல் மும்பை ஹோட்டலில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது உட்பட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கராவத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவன் ஆவான்.
ஹஃபீஸ் சயீது, மில்லி முஸ்லீம் லீக் என்ற கட்சியை பாகிஸ்தானில் நடத்தி வருகிறான். இந்நிலையில், வருகிற 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சைஃபுல்லா காலித் என்பவர் கூறியதவாது:
பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. 1973-ம் ஆண்டு குர்ரான் மற்றும் சுன்னா என்ற கலாசார அடிப்படையைக் கொண்டு ஆட்சி முறை நடத்துவோம்.
இது அனைத்து தரப்பினருக்கும் ஏதுவாக இருக்காது. ஆனால் எங்கள் கொள்கையானது இஸ்லாமிய ஆட்சி முறையாக இருக்கும் என்றார்.