இந்தியா
காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
பயங்கரவாத அமைப்புகளுக்கு பிரிவினைவாதிகள் நிதி திரட்டி அளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் 12 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள்
பயங்கரவாத அமைப்புகளுக்கு பிரிவினைவாதிகள் நிதி திரட்டி அளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் 12 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து தில்லியில் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக பிரிவினைவாதிகளால் நிதி உதவி அளிக்கப்பட்டுவந்தது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் ஸ்ரீநகர், பாராமுல்லா, ஹந்த்வாரா உள்ளிட்ட 12 இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்ததாக 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர்.