பிகார்: பிகார் மாநிலத்தின் குமர்தாரி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிஆர்பிஎப் சிறப்பு பிரிவு வீரர்கள் மற்றும் போலீஸார் குமர்தாரி வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவற்றிற்கு பதிலடி தரும் வகையில் மாவோஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரண்டு மாவோஸ்டுகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், ஒரு நாளிதழ் மற்றும் மதுபான பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட இரண்டு மாவோஸ்டு உடல்களுடம் உடல்களும் பர்ஹாத் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.