உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, சப்பார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது: முஸாஃபர்நகர் மாவட்டம், பசேரா கிராமத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அமீன் மற்றும் ஆசிஃப் ஆகியோரது வீட்டிலிருந்து 35 கிலோ எடையிலான மாட்டிறைச்சி சிக்கியது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அமீன் மற்றும் ஆசிஃப் இருவரும் சகோதரர்கள் ஆவர் என்றார் அந்த அதிகாரி.