உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com