மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை குண்டு வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் தங்குமிடத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.