எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு, சென்னை உட்பட மொத்தம் 20 இடங்களில் இன்று காலை 8.45 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.சித்தார்த் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.சமீபத்தில்தான் கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வீட்டில் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.