இந்தியாவின் உக்ரைன் தூதர் ஈகோர் போலிகா, தில்லியை சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அப்போது தில்லியில் உள்ள செங்கோட்டையைப் புகைப்படம் எடுத்த நேரத்தில் அவரது மொபைல் ஃபோன் திருடப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வந்த தகவல்களின் அடிப்பைடையில், உக்ரைன் தூதர் செங்கோட்டையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவரது மொபைல் ஃபோனை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் தூதர் ஈகோர், தில்லி காவல் ஆணையர் மற்றும் இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
அச்சமயம் அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடனில்லை. மேலும், அவரது ஓட்டுநரும் சிறிது தூரத்தில் இருந்த காருடன் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.