திருப்பதியில் கோர விபத்து: கடைகளுக்குள் லாரி புகுந்ததில் 12 பேர் பலி

திருப்பதியில் சாலையோரக் கடைகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் கோர விபத்து: கடைகளுக்குள் லாரி புகுந்ததில் 12 பேர் பலி


திருப்பதி: திருப்பதியில் சாலையோரக் கடைகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எர்பேடுமண்டலம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இதில், சாலையோரம் நின்றிருந்த மற்றும் டீக்கடையில் இருந்த 12 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை அடுத்த எர்பேடு கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com