குஜராத்தி மொழியில் கவிதை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார்.
சுட்டுரையில் அந்த கவிதையை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பகிர்ந்து கொண்டிருந்தார். 10 வரிகளைக் கொண்ட அந்த கவிதைக்கு, 'ராமதா ராம் அகேலா' எனத் தலைப்பு வைத்துள்ளார்.
இந்த கவிதையை லண்டனில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்த கவிதை இதுதான் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற 'பாரத் கீ பாத், சப்கே சாத்' என்ற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மோடி பதிலளித்தபோது, குஜராத்தி மொழியில் தாம் கவிதை எழுதியிருப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது அந்த கவிதையை தெரிவிக்கும்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
அதற்கு பிரதமர் மோடி, இணையதளத்தில் கவிதையை பகிர்ந்து கொள்வேன் என்று குறிப்பிட்டார்.