2ஜி மேல்முறையீட்டு வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பறிப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை கடந்த மார்ச் மாத இறுதியில் மேல்முறையீடு செய்தன.
இம்மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.