தமிழகத்தில் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவிலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.