சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு, இணை இயக்குநர் அந்தஸ்திலிருந்து கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே மோதல்போக்கு நிலவி வந்ததையடுத்து, இருவரையும் அவர்களது பதவிகளில் இருந்து விடுவித்தது மத்திய அரசு. சிபிஐ இடைக்கால இயக்குநராக, நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐ இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வர ராவுக்கு, கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு வழங்க, பணி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.