இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்திய முக்கியக் குற்றவாளியை ஆந்திர காவல்துறையினர் குஜராத்தில் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த குற்றவாளிகளைத் தேடி ஆந்திர மாநிலம் கடப்பா காவல்துறையினர் குஜராத் விரைந்தனர். அங்கு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கியக் குற்றவாளி அசோக்குமார் அகர்வாலை கைது செய்தனர்.
அசோக்குமார் அரவாலிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 3 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 1000 டன் செம்மரக் கட்டைகளை அசோக் குமார் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.