கேரளம், லட்சத்தீவில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளத்திலும், லட்சத்தீவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளத்திலும், லட்சத்தீவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரபிக் கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கேரளத்திலும், லட்சத்தீவிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அங்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்திலும் கன மழை நீடிக்க வாய்ப்புள்ளது. கேரளத்தின் கொல்லம், ஆலப்புழை ஆகிய நகரங்களில் பலத்த காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com