அலுவலகத்தில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த லோக் ஆயுக்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி புதன்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடந்த மார்ச் 7-ஆம் தேதி லோக் ஆயுக்த அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை, மனு கொடுப்பது போல வந்த தும்கூரைச் சேர்ந்த தேஜஸ்ராஜ்சர்மா என்பவர் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி, கஸ்தூரிபா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பினார். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.