அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
திரிபுராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக-ஐபிஎஃப்டி உறுப்பினர்களுடன், சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது தாற்காலிக அவைத் தலைவர் சக்ரவர்த்தி, சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக பேரவையில் தேகிய கீதம் வாசிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று தேசியகீதத்துக்கு மரியாதை செய்தனர்.
தினந்தோறும் திரிபுரா சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த சட்டப்பேரவையிலாவது தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று சட்டப்பேரவைச் செயலர் பாம்தேவ் மஜும்தார் கூறினார்.