2019-இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி: அசோக் சவாண்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல் தொடர்பாக மகாராஷ்டிரத்தில் 3 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
கட்சியின் மூத்த தலைவர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் முன்வருகின்றனர். முழு பலத்துடன் போட்டியிடவுள்ளோம். மக்களின பேராதரவுடன் வெற்றி பெற்று, ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com