ஐநா மனித உரிமை ஆணையத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினராக இடம்பிடித்துள்ளது.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு ஐநா தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் உறுப்பினராக குறைந்தபட்சம் 97 வாக்குகள் தேவை. ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இடம்பிடித்தது.
இதன்மூலம், ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும்.