இந்திய கடற்படை வீரரை மீட்க உதவிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களுக்கு பாராட்டு - குடியரசுத் தலைவர்

கடல் வழியாக உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று இந்தியப் பெருங்கடலில் தத்தளித்து வந்த இந்திய கடற்படை வீரரை மீட்க உதவிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களை குடியரசுத் தலைவர் பாராட்டினார். 
இந்திய கடற்படை வீரரை மீட்க உதவிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களுக்கு பாராட்டு - குடியரசுத் தலைவர்

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்று இந்தியப் பெருங்கடலில் தத்தளித்து வந்த இந்திய கடற்படை வீரரை மீட்பதற்கு உதவிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பாராட்டை தெரிவித்தார். 

இந்திய கடற்படை வீரர் மோசமான வானிலையால் இந்தியப் பெருங்கடலில் சிக்கி தவித்த அபிலேஷ் டோமியை பிரான்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.   

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். ‘துரியா’ என்று பெயரிடப்பட்ட படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்த டோமி, திடீரென புயலில் சிக்கினார். 

மோசமான வானிலையுடன் சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்து டோமியின் படகை அலைக்கழித்தன. இதனால் படகில் சிக்கிக்கொண்ட அபிலாஷ் டோமிக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், படகை விட்டு அவரால் நகர முடியவில்லை. இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு இந்திய கடற்படைக்கும் நேற்று அவர் தகவல் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. அதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே, இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்திய பெருங்கடலில் சிக்கி தவித்த அபிலேஷ் டோமியை பிரான்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீட்டுள்ளதாகவும், அபிலேஷ் பாதுகாப்பாக உள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது. 

இதையடுத்து, அபிலேஷ் டோமியை காப்பாற்றிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தனது பாராட்டை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,  

"தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படை அதிகாரி அபிலேஷ் டோபி மீட்கப்பட்டுள்ளார். அந்த இடத்துக்குச் சென்று அவரை மீட்பதற்கான முயற்சியில் பங்கெடுத்த நமது பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர்களை பாராட்டுகிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com