தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கேரளாவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் வளையாரு அருகே செல்புலச்சேரியில் உள்ள கிரிம்புழா பகுதியில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவதாஸ் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில் வாங்கப்பட்டு இங்கு 10 மடங்கு கூடுதல் விலையுடன் விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.