நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்ற நிலையில், நாட்டிலேயே உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பிகாரில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதுபோல் நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.