தசரா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புது தில்லியில் செயல்பட்டு வரும் லவ குச ராம் லீலா கமிட்டி ராமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஆண்டு தசராவின் 9 நாட்களிலும் செங்கோட்டையில் நாடகமாக அரங்கேற்றும்.
இந்நிலையில், இம்முறை நடைபெற்று வரும் நாடகத்தில் சீதையின் தந்தையான ஜனக மகாராஜா கதாப்பாத்திரத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏற்று நடித்தார். அவரது இந்த பாத்திரத்துக்கு அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.