ஹைதராபாத்: தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட தீவிரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இன்று 3 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிங்ஸ் காலணியில் (ஹைதராபாத்) உள்ள தனது வீட்டில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தஹிர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தில்லியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவரை கொலை செய்ய திட்டமிடப்படிருந்தது தெரிய வந்துள்ளது.
NIA Sources: NIA has arrested an ISIS sympathizer from his home in Kings Colony (Hyderabad). NIA conducted searches at 3 locations in Hyderabad today.