ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தின் கொப்பராம் கிராமத்தில் 3 சிறுவர்கள் இன்று காலை அருகிலிருக்கும் மசூதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கொடிமரத்தை பிடித்து 3 சிறுவர்கள் விளையாடியிருக்கிறார்கள்.
இந்த சம்பத்தின்போது கொடிமரத்தின் மேலே சென்ற மின்கம்பி உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அமீன் பீர் (11), கோஸ்(11) ஹூசைன் (10), ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.