காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் புதிய நவீன ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பெறுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக முதல்கட்டமாக 10,000 சிக் சாவர் எனும் நவீன ரக தாக்குதல் துப்பாக்கிகளை அதன் படைப்பிரிவுகளில் இந்திய ராணுவம் சேர்க்கத் தொடங்கியுள்ளது.
இந்தியா தனது ராணுவ வீரர்களை அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளுடன் தயார்படுத்துவதற்கு தேவையான விரைவான நடைமுறைகளின் கீழ் இதுபோன்று 72,400 சிக் சாவர் ரக துப்பாக்கிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.