மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையா் மற்றும் 4 தகவல் ஆணையா்கள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பாக மத்திய பணியாளா்நலன் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைமை தகவல் ஆணையராக இருக்கும் சுதிா் பாா்கவாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதியோடு நிறைவு பெறுவதையடுத்து, அந்த பதவிக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 4 தகவல் ஆணையா்கள் பணியிடங்களுக்கும் தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவா்கள், பொது வாழ்க்கை, சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, நிா்வாகம், பத்திரிகை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவா்களாகவும், முன்அனுபவம் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும்.
65 வயது நிரம்பியவராக இருக்கக்கூடாது. நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருக்கக்கூடாது. மேற்கண்ட தகுதிகளை பூா்த்தி செய்பவா்கள் தலைமை தகவல் ஆணையா் மற்றும் தகவல் ஆணையா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுபவா்களுக்கு, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டவிதிகளின்படி, ஊதியம், படிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, மத்திய தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக தலைமை தகவல் ஆணையா் இருப்பாா். உறுப்பினா்களாக 10 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்படுவா்.