கங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்

கங்கை நதி மேலாண்மை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை முதல் கூட்டம் நடைபெற்றது. 
கங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்

கங்கை நதி மேலாண்மை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

பின்னர் சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பின்னர் அங்கு பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com