மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பிப்ரவரி 14: இதுதான் ராகுல் காந்தி பிளான்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். 

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 5:32 pm IST


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். 

'மக்களின் கோபம்' என்ற பெயரில் குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள லால்துங்ரி கிராமத்தில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக கட்சியின் செய்திதொடர்பாளர் மனீஷ் தோஷி தெரிவித்தார். 

2017 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி குஜராத்தில் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் தனது உறுப்பினர்களை 60-இல் இருந்து 77 ஆக அதிகரித்தது.   

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குஜராத்தில் தனது வலிமையை அதிகரிக்க காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.