பெங்களூருவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூருவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2019’ என்ற பெயரில் விமானக் கண்காட்சி நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள ஏலஹன்கா விமான தளத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. 

இந்த பயிற்சியின் போது இரு விமானங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. உடனே விபத்துக்குள்ளான விமானங்களில் இருந்து 2 விமானிகளும் பாதுகாப்பாக பாராசூட் மூலம் குதித்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com