புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளை கடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் மர்ம நபர்கள் விடுத்துள்ள மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தில்லி முதல்வர் அலுவலகத்துக்கு கடந்த புதன்கிழை (ஜன.9) மர்ம இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், தில்லி முதல்வரின் மகளை கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வரின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.
மிரட்டல் இ-மெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வரின் மகளை கடத்தப்போவதாக வந்துள்ள மர்ம கடிதத்தால் தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.