ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஃபரூக் அகமதுகான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை அரசின் பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கே.விஜய்குமார், கே.கே.சர்மா, குர்ஷித் கனி மற்றும் ஸ்கந்தன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ள நிலையில், ஃபரூக் அகமதுகான் 5ஆவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.