மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு



மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்திருப்பதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படை அந்தேரியில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தற்போது மீட்பு பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.  


புகைப்படங்கள்: ஏஎன்ஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com