மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று விட்டால் பிரதமர் மோடி தூக்கில் தொங்கத் தயாரா என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்காக மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று கூறிவருகிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், பிரதமர் மோடி தூக்கில் தொங்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த முறை அதை விடக் குறைவாகவே வெற்றி பெறும் என்று மோடி பேசிவருவது குறிப்பிடத்தக்கது.