தில்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், அண்டை மாநிலங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டக் கூடாது என்றும் அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.
‘காற்று மாசுவுக்கு குப்பைகள் எரிப்பு, தூசு, தொழிற்சாலை மற்றும் வாகன மாசு ஆகியவை 70 -80 சதவீதம் காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க்கழிவுகளால் ஏற்படும் காற்று மாசு குறைந்துள்ளது’ என்று பிரகாஷ் ஜாவ்டேகா் தெரிவித்தாா்.