ஹைதராபாத்தில் உள்ள கச்சிகூடா ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை கர்ணூல்-ஹைதராபாத் ஹிந்திரி இண்டர்சிட்டி விரைவு ரயில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது, மலக்பேட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த லிங்கம்பள்ளி-ஃபலக்னுமா எம்எம்டிஎஸ் ரயில் சமிக்ஞைகளை மீறிய வகையில் வந்து, இண்டர்சிட்டி ரயில் மீது மோதியது.
இதில் பயணிகள் 13 பேர் காயமடைந்தனர். எம்எம்டிஎஸ் ரயிலின் என்ஜின் கேபினுக்குள்ளாக சிக்கிக் கொண்ட அதன் ஓட்டுநர் சுமார் 2 மணி போராட்டத்துக்குப் பிறகு காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்தில் எம்எம்டிஎஸ் ரயிலின் 6 பெட்டிகளும், இண்டர்சிட்டி விரைவு ரயிலின் 3 பெட்டிகளும் சேதமடைந்தன.
இந்நிலைியல், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.