ஸ்ரீநகர் : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ரயில் சேவை சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் இன்று தொடங்கியது.
பத்வாரா - பாடமலு பகுதிகளுக்கு இடையே சில சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன.
பாரமுல்லா - ஸ்ரீநகர் இடையேயான ரயில் இன்று காலை தனது சேவையை தொடங்கியதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.