கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மைசூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் செய்த் மீது அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தினார்.
இந்நிலையில், எம்எல்ஏ தன்வீர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்எல்ஏ மீது கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மர்ம நபரின் பெயர் ஃபர்ஹான் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் சம்பவப் பின்னணி குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.