மகாராஷ்டிராவில் நிலையான அரசாங்கத்தை வழங்குவோம்: ஆதித்யா தாக்கரே

நாங்கள் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறோம், மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை வழங்குவோம் என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நிலையான அரசாங்கத்தை வழங்குவோம்: ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனை, என்சிபி மற்றும் காங்கிரஸின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி மாநிலத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைத்து செயல்படும் என்று சிவசேனை இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பின்னர் ஆதித்ய தாக்கரே கூறியதாவது, 

மகாராஷ்டிரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அமைக்கப்பட்ட மகா விகாஸ் அகாதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஆளுநர் எங்களுக்கு வழங்கியுள்ளார். 

நாங்கள் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறோம், மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை வழங்குவோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com