மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சனிக்கிழமை, முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வாலேஸ் பாட்டீல், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் மகாராஷ்டிர பேரவைக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான பாலாசாஹேப் தோரட்,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான நானா படோலி, சட்டப்பேரவைத் தலைவராக போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.