புது தில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை இரவு பாங்காக் புறப்பட்டு சென்று விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதயயடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் .இதையடுத்து சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது மஹாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தி அங்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் நினைத்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை இரவு பாங்காக் புறப்பட்டு சென்று விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பாங்காங் செல்லும் விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராகுல்காந்தி புறப்பட்டுச் சென்றார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதை உறுதிப்படுத்துமாறும், பயணம் முடித்து ராகுல்காந்தி எப்போது இந்தியா திரும்பவார் என்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு காங்கிரஸ் வட்டாரங்கள் பதில் ஏதும் அளிக்கவில்லை.