நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒரே வீட்டில் இருந்து 925 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 925 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட 925 கிலோ கஞ்சா

Updated On :11 செப்டம்பர் 2019, 5:48 am

DIN

ஒரே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 925 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள படேரு மண்டலத்தில் ஒரு வீட்டில் அதிகளவிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், ஆய்வாளர் அனில் குமார் தலைமையிலான கலால் துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 925 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெகன்னாத் ராவ் ஆகிய இருவரையும் இவ்விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.