சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: 4 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு

சத்தீஸ்கரில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட நக்ஸல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: 4 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு

சத்தீஸ்கரில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட நக்ஸல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நக்ஸல் தடுப்புப் பிரிவு டிஐஜி பி.சுந்தரராஜ் கூறுகையில்,

சத்தீஸ்கர் மாநிலத்தின் கன்கேர் பகுதியில் நக்ஸல்கள் திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில், 114 படாலியன் பிரிவைச் சேர்ந்த 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர், 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்நிலைியல், இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com