நக்ரகடா: பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்றும், அவரது வாயை டேப் போட்டு ஒட்ட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளையும், ஏழை, நடுத்தர மக்களையும் சந்திக்க நேரமில்லாத மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களிடம் ஓடி வந்த மோடி, பொய் மூட்டைகளை அள்ளிவிட்டு வாக்குச் சேகரிக்கிறார். ஒருவேளை பொய் சொல்வதில் போட்டி வைத்தால் மோடிக்குத்தான் முதல் பரிசு என்றும் மம்தா பானர்ஜி காட்டமாகக் கூறியுள்ளார்.