நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தினால் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சிறைபிடிக்கப்பட்டது.
நஷ்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு பகுதி ஊதியத்தை மட்டுமே அளித்து வருகிறது. இதனால், குறிப்பிட்ட சில விமானிகள் நிர்வாகத்துக்கு நேற்று (செவ்வாய்கிழமை) சட்டரீதியிலாக நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தினால் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் அங்கு சிறைபிடிக்கப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்னதாக எடுக்கப்பட்டது. இதனால், பயணிகள் சற்று சிரமத்துக்குள்ளாகினர்.