நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். நேபாளத்தின் சோலுகும்பா மாவட்டத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
சிறியவகை சம்மிட் வகை பயணிகள் விமானம், காத்மாண்டு செல்ல புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து மனங் ஏர் 3 வகை ஹெலிகாப்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி விமானி மற்றும் 2 போலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.