சட்ட மேதை அம்பேத்கரின் 128-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை அம்பேத்கரின் 128-ஆவது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலை முன்பு உள்ள அவரது திருவுருவ படத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.