ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாரமுல்லா மாவட்டம் வாட்டர்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
Jammu & Kashmir: One unidentified terrorist killed in a brief exchange of fire between terrorists and security forces in Sopore's Watergam area. Arms and ammunition recovered.