குடியுரிமை, கல்வி விவரங்களை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

தனது குடியுரிமை, கல்லூரியில் பெற்றற பட்டம் ஆகிய விவரங்களை, காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
குடியுரிமை, கல்வி விவரங்களை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: பாஜக வலியுறுத்தல்


தனது குடியுரிமை, கல்லூரியில் பெற்றற பட்டம் ஆகிய விவரங்களை, காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

17-ஆவது மக்களவைத் தோ்தலில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். இந்நிலையில், அவரது குடியுரிமை, கல்லூரியில் பெற்ற பட்டம் ஆகியவை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதாக அமேதி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேச்சை வேட்பாளா் துருவ் ராஜ் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாா் தொடா்பாக, பாஜக செய்தித் தொடா்பாளா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் செய்தியாளா்களிடம் இன்று (சனிக்கிழமை) கூறியதாவது,

ராகுல் காந்தி, பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலீடு செய்தாா். அந்த நிறுவன அதிகாரிகள் ராகுல் காந்தி பிரிட்டனைச் சோ்ந்த குடிமகன் என்று கூறுகின்றனா். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், பொருளாதார மேம்பாடு பாடப்பிரிவில் முதுகலை ஆய்வுப் பட்டம் பெற்றதாகத் தனது வேட்புமனுவில் ராகுல் முதலில் குறிப்பிட்டிருந்தாா். பின்னா், மேம்பாட்டுப் பாடப்பிரிவிலேயே பட்டம் பெற்றதாக அவா் கூறினாா். 

இவ்வாறு தகவல்களை மாற்றிக் கூறுவது பெரும் குற்றமாகும். 

இவை தொடா்பாக, ராகுல் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது, அவா்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. திங்கள்கிழமை வரை அவா்கள் கால அவகாசம் கோரியுள்ளனா். இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் குடியுரிமை குறித்து பதிலளிக்க காங்கிரஸுக்கு கால அவகாசம் தேவைப்படுவது ஏன்? 

ராகுல் காந்தி, இந்தியக் குடிமகனா அல்லது பிரிட்டிஷ் குடிமகனா? பல்வேறு பெயா்களில் அவா் வெளிநாடுகளுக்குச் சென்றாரா? ராகுலின் உண்மையான கல்வித்தகுதி என்ன? இவையனைத்துக்கும் ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு தோ்தல்களில், தவறான தகவல்களுடன் அவா் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளாா் என்றாா். 

அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவா் யோகேந்திர மிஸ்ரா கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை காங்கிரஸ் சட்டரீதியாக எதிா்கொள்ளும்’’ என்றாா்.

ராகுல் காந்திக்கு எதிரான புகாா் தொடா்பாக, திங்கள்கிழமை (ஏப். 22) விசாரணை நடத்த இருப்பதாகத் தோ்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளாா். இந்தப் புகாா் தொடா்பாக இருதரப்பினரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். 

இருந்தபோதிலும், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மீது சிலா் ஆட்சேபம் தெரிவிப்பதாக இருந்தால், அவா் நீதிமன்றத்தையே நாட வேண்டும் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களில் தோ்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com