ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலும், ஹைதராபாத்திலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ)
ஹைதராபாதில் நடத்திய சோதனைக்குப் பிறகு ஒரு நபரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் என்ஐஏ அதிகாரிகள்.
ஹைதராபாதில் நடத்திய சோதனைக்குப் பிறகு ஒரு நபரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் என்ஐஏ அதிகாரிகள்.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலும், ஹைதராபாத்திலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தினர். இச்சோதனைக்கு பிறகு 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.  
அஸார்-உல்-இஸ்லாம்,  அட்னன் ஹஸன், முகமது ஃபர்ஹான் ஷேக் ஆகிய 3 பயங்கரவாதிகள் அபுதாபியில் இருந்து  தில்லிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு விமானத்தில் வந்திறங்கிய போது என்ஐஏ அமைப்பினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து  13 செல்லிடப்பேசிகள், 11 சிம்கார்டுகள், ஒரு ஹை பேடு, 2 மடிக்கணினிகள், பென்டிரைவ்கள் மற்றும் 3 வாக்கி டாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் அளித்த தகவலின் பேரிலும், மேலும் பல்வேறு விசாரணைகளின் மூலமாகவும்,  ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஹைதராபாத்திலும், மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலும் சனிக்கிழமை சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையில், ஏராளமான மின்னணு கருவிகள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதுடன், 4 நபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் என்ஐஏ அமைப்பு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் முகம்மது அப்துல்லா பாஷித், முகமது அப்துல் காதிர் ஆகிய இருவரை ஹைதராபாத் நகரில் என்ஐஏவினர் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இந்தச் சோதனையின் மூலம், கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில்,கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட அட்னன் ஹஸனுடன், முகமது அப்துல்லா பாஷித் தொடர்பில் இருந்துள்ளார்.  எனவே, பாஷித் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் இந்த சதித்திட்டத்தில் தொடர்பிருக்க கூடும் என்று கருதப்படுவதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com